இலங்கையில் மேலும் 6 பேர் மரணம் : மரணங்களின் எண்ணிக்கை 171 ஆக உயர்வு!!

697

கொவிட்-19..

நாட்டில் கொவிட்-19 நோய்த் தொற்றினால் மரணித்தோர் எண்ணிக்கை 171 ஆக உயர்வடைந்துள்ளது. இன்றைய தினம் ஆறு கொவிட் மரணங்கள் தொடர்பில் அரசாங்கத் தகவல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

1. கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதான பெண் ஒருவர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார். இரத்தம் விசமாகியமை மற்றும் உடல் பாகங்கள் செயலிழந்தமை, கொவிட், நிமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.

2. வீரகுல பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதான ஆண் ஒருவர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார். கொவிட் காரணமாக ஏற்பட்ட இருதய நோயினால் இவர் உயிரிழந்துள்ளார்.

3. கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயதான ஆண் ஒருவர் கடந்த 17ம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். உயர் குருதியழுத்தம் மற்றும் நீரிழிவு, கொவிட், நிமோனியா ஆகியனவற்றினால் இவர் உயிரிழந்துள்ளார்.

4. கொழும்பு 10 பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதான ஆண் ஒருவர் கடந்த 17ம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இவர் கொவிட், நிமோனியாவினால் உயிரிழந்துள்ளார்.

5. கிரிவத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 88 வயதான பெண் ஒருவர் நேற்று வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். உயர் குருதியழுத்தம் மற்றும் மாரடைப்பு காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.

6. பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயதான பெண் ஒருவர் நேற்று வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். உயர் குருதியழுத்தம் மற்றும் மாரடைப்பு காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.

சுகாதார சேவைப்பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அரசாங்கத் தகவல் திணைக்களம் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.