மோட்டார் சைக்கிள் விபத்து..
வவுனியாவில் வேகக்கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் மரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதுடன் மோட்டார் சைக்கிளுடன் சாரதி 50 மீற்றர் தூரம் வரை தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா பூங்கா வீதியில் யாழ்.பல்கலைக்கழக வவுனியா வளாகத்திற்கு அருகாமையில் இன்று (24.12.2020) மதியம் 2.15 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நூலக வீதியூடாக புகையிரத நிலைய வீதி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் யாழ்.பல்கலைக்கழக வவுனியா வளாகத்திற்கு அருகாமையில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியில் அருகேயிருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதுடன்,
மரத்தடியிலிருந்து சுமார் 50 மீற்றர் தூரம் வரை மோட்டார் சைக்கிலும் அதன் சாரதியும் தூக்கி விசப்பட்ட நிலையில் காணப்பட்டனர்.
படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட மோட்டார் சைக்கிளின் சாரதியான 23 வயது மதிக்கத்தக்க இளைஞன் பொதுமக்களின் உதவியுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.