கணவன் இறந்த சோகத்தில் மனைவி எடுத்த விபரீத முடிவு : அனாதையான 2 குழந்தைகள்!!

1220

மதுரை..

யாருடனும் பேசவில்லை.. சாப்பிடவுமில்லை.. பித்து பிடித்ததுபோல சுவற்றையே பார்த்து கொண்டிருந்தார் அங்கயற்கண்ணி. தீ விபத்தில் இ றந்துபோன கணவனை மறக்க முடியாமல் அ.ழு.து அ.ழு.து ஓய்ந்த நிலையில், கடைசியில் வி பரீத முடிவை எடுத்து விட்டார்.

கடந்த தீபாவளி அன்று விடிகாலை, மதுரை விளக்குத்தூண் அருகிலுள்ள ஒரு ஜவுளிக்கடையில் திடீரென தீப்பிடித்து கொண்டது.. அதனால், தீயணைப்புத் துறையினர் விரைவாக வந்து, தீயை கட்டுக்குள் கொண்டு வர போ ராடினார்கள்.

அப்போது அந்த கட்டிடமே இடிந்து விழுந்துவிட்டது.. அந்த இடிபாட்டில் 4 வீரர்கள் சி.க்.கி.க் கொண்டனர்.. அதில் சிவராஜா, கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 பேர் உ யிரிழந்துவிட்டனர்.

உயிரிழந்த கிருஷ்ணமூர்த்திக்கு கல்யாணமாகவில்லை. செக்கானூரணியை சேர்ந்த சிவராஜாவுக்கு கல்யாணமாகி 8 வருஷமாகிறது.. இவரது மனைவிதான் அங்கயற்கண்ணி. 29 வயதாகிறது.. 6 மற்றும் 2 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். சிவராஜாவின் திடீர் மறைவால் அந்த குடும்பமே நிலைகுலைந்துவிட்டது.

ரூ.25 லட்சமும், தீயணைப்புத்துறையினர் சார்பில் ரூ.50 லட்சமும் நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.. கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.. ஆனால், அங்கயற்கண்ணியை எப்படி, யாரால் சமாதானப்படுத்துவது என்றுதான் தெரியவில்லை.

கணவர் இ றந்த பின்னர் மாமனார் வீட்டில்தான் குழந்தைகளுடன் இருந்தார்.. ஆனால் யாருடனும் பேசவே இல்லை.. ஒருவேளை அம்மா வீட்டுக்கு சென்றால் அங்கேயாவது இயல்பு நிலைக்கு வருவார் என்று நினைத்து, புதுக்கோட்டையிலுள்ள பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கும் அப்படியேதான் இருந்தார். சாப்பிடவும் இல்லை. அ.ழு.து கொண்டே இருந்தவருக்கு என்ன சொல்லி ஆறுதல்படுத்துவது என்றும் குடும்பத்தினருக்கு தெரியவில்லை. சம்பவத்தன்று, மூத்த மகனுக்கு உடம்பு சரியில்லாமல் போகவும், அவனை வீட்டில் இருந்தோர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அந்த நேரம் பார்த்து அங்கயற்கண்ணி, தன் ரூமுக்குள் சென்று கதவை சாத்தி கொண்டு வெளியே வரவே இல்லை. கதவை தட்டியும் திறக்கவே இல்லை.

பிறகு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உ.டை.த்.து கொண்டு போனால், தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய நி லையில் கி.ட.ந்.தா.ர். ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றும் பிரயோஜனமில்லை. எப்போதோ உ.யி.ர் போய்விட்டது என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.

நாகமலை போலீசார் இது சம்பந்தமான வி சாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.. என்றாலும் அம்மா, அப்பா இல்லாமல் அந்த குழந்தைகள் 2 பேரும் அழுது கொண்டே இருக்கிறார்கள்.