மனைவி கேட்ட ஒரு விடயம் : திருமணமான மூன்றே மாதத்தில் கணவன் எடுத்த விபரீத முடிவு!!

2594

ராஜ்குமார்..

தமிழகத்தில் திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டது சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (20).

இவர் 18 வயது பெண்ணை காதலித்து வந்தார். இருவீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு தன் பெற்றோர், தம்பி, பாட்டி மற்றும் மனைவியின் தாய் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

ஆனால் கூட்டுக்குடும்பத்தில் வசிப்பது ராஜ்குமாரின் மனைவிக்குப் பிடிக்கவில்லை. இதையடுத்து தனிக்குடித்தனம் போகலாம் என கணவரை வ ற்புறுத்தி யுள்ளார்.

சிறிது நாட்கள் அனுசரித்துக் கொண்டால் தனி வீடு எடுத்து போகலாம் என்று மனைவியிடம் ராஜ்குமார் கூறியிருக்கிறார். ஆனால் தனி குடித்தனம் போவது ராஜ்குமாரின் குடும்பத்திற்கும் அவரை வளர்த்த பாட்டிக்கும் பிடிக்கவில்லை என்று தெரிகின்றது.

மேலும் ராஜ்குமாரின் பாட்டி குடும்பத்தை பிரிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார். இதனால் மனைவி பக்கம் பேசுவதா, பாட்டி சொல்வதை கேட்பதா என்று குழப்பத்தின் உச்சத்துக்கே சென்றுள்ளார் ராஜ்குமார்.

இதனால் கடந்த பத்து நாட்களாக யாரிடமும் பேசாமல், நண்பர்களையும் சந்திக்காமல் தனிமையில் இருந்துள்ளார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ராஜ்குமார் வி.ஷ.ம் கு.டி.த்.து த.ற்.கொ.லை செ ய்து கொ ண்டார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.