மனைவியை தனியே வீட்டில் விட்டு இரு குழந்தைகளுடன் வெளியில் சென்ற கணவன் : நடந்த விபரீதம்!!

956

விருதுநகர்..

தமிழகத்தில் நடுரோட்டில் தனது இரண்டு குழந்தைகளுடன் சேர்ந்து தந்தை இ.ர.த்.த வெ ள்ளத்தில் உ யிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தின் செந்தட்டியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி (36). இவருடைய மனைவி காயத்ரி. இவர்களுடைய மகன் கமலேஷ் (9) மகள் குஷிகா (8).

மகன், மகளுக்கு காய்ச்சல் இருந்ததால் நேற்று காலையில் அவர்கள் இருவரையும் கணபதி தனது, மோட்டார் சைக்கிளில் ராஜபாளையத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

காயத்திரியை கணபதி வீட்டிலேயே விட்டு சென்றிருக்கிறார். பின்னர் பிள்ளைகளுக்கு உணவு, மருந்துகளை வாங்கிக்கொண்டு, வீட்டிற்கு திரும்ப அழைத்து வந்து கொண்டு இருந்தார்.

சங்கரன்கோவில் சாலையில் உள்ள பெரியாதிகுளம் அருகே அவர்களது மோட்டார் சைக்கிள் வந்த போது, முன்னால் ஒரு டிராக்டர் சென்றது. அதனை கணபதி முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிரே ஒரு அரசு பஸ் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த பஸ்சின் பக்கவாட்டில் மோட்டார் சைக்கிள் மோதியதாக தெரிகிறது.

இதில் கணபதி, அவருடைய மகன், மகள் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டதில், பஸ்சின் முன் சக்கரத்தில் சிக்கி தந்தையும், மகளும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ப லியாகினர்.

தலையில் பலத்த கா யங்களுடன் சிறுவன் கமலேஷ் உ யிருக்கு போ ராடினான். பின்னர் மருத்துவமனை நோக்கி தூக்கி செல்லப்பட்ட கமலேஷ் பரிதாபமாக உ யிரிழந்தான். சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் பஸ் டிரைவர் கண்ணன் (46) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.