வவுனியாவில் வீட்டில் சடலமாக தாயும் மகளும் : வறுமை காரணமாக த.ற்.கொ.லை?

4043

பறண்நட்டகல் பகுதியில்..

வவுனியா, பறண்நட்டகல் பகுதி கிணறு ஒன்றிலிருந்து தாயினதும் அவரது மூன்று வயது குழந்தையினதும் சடலங்களை நேற்று முன்தினம் (28.12.2020) ஓமந்தை பொலிஸார் மீ.ட்டிருந்தனர்.

குறித்த இருவரும் கடந்த 27ம் திகதி அவர்களது வீட்டில் இருந்துள்ளனர். எனினும் இரவு 12 மணியவிளவில் காணாமல்போயிருந்த நிலையில் ஊர்மக்கள் மற்றும் உறவினர்கள் அவர்களை தே.டி வந்த நிலையில்,

நேற்று முன்தினம் 28-ம் திகதி காலை வீட்டுக்கு அருகில் இருந்த வயல் கிணறு ஒன்றிலிருந்து அவர்கள் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 42 வயதான தாயும் அவரது மூன்று வயதான மகளும் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த தாய், தனது குழந்தையுடன் வறுமை காரணமாக த.ற்.கொ.லை செ ய்து கொண்டுள்ளதாக அப் பகுதி மக்களால் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.