சம்பா மற்றும் நாடு அரிசிகளின் விலை அதிகரிப்பு!!

2009

அரிசிகளின் விலை அதிகரிப்பு..

ஒரு கிலோ கிராம் சம்பா நெல்லின் விலை 82 ரூபாவாக அதிகரித்துள்ளதுடன், ஒரு கிலோ கிராம் நாடு நெல்லின் விலை 62 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதனால் அரிசி விலைகளையும் அதிகரிக்க நேரிட்டுள்ளதாக மரதகஹாமுல்ல அரிசி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மரதகஹாமுல்ல அரிசி சந்தையில் ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின் மொத்த விற்பனை விலை 130 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் நாடு அரிசியின் மொத்த விற்பனை விலை 106 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

ஜனவரி மாத இறுதியில் நெல் அறுவடை கிடைக்க உள்ளதால், அதன் பின்னர் அரிசி விலைகள் குறையலாம் எனவும் வியாபாரிகள் கூறியுள்ளனர்.