திருமண வைபவத்தில் கலந்து கொண்ட மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று!!

889

கொரோனா..

அளுத்கமை பிரதேசத்தில் நடைபெற்ற திருமண வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் பயாகலை, பொத்துவில மற்றும் களுத்துறை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என களுத்துறை பொது சுகாதார பரிசோதகர் ஆர்.ஜீ.சிங்கபாகு தெரிவித்துள்ளார்.

கடந்த 16ஆம் திகதி அளுத்கமையில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்ட ஒருவர் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டார்.

இதனையடுத்து அதில் கலந்து கொண்டவர்களுக்கு ரெப்பீட் என்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் மணமகள் உட்பட 27 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இதனையடுத்து இவர்களின் இணைப்பாளர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இந்த 21 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.