ஆரோக்கியமான பிள்ளைகளை பெற்றெடுத்த கொரோனா தொற்றுக்கு உள்ளான தாய்மார்!!

634

கொரோனா..

கொழும்பு கிழக்கு வைத்தியசாலையில் கடந்த டிசம்பர் முதலாம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையான காலத்தில் கொரோனா தொற்றாளர்களான 38 கர்ப்பிணி தாய்மார் 40 குழந்தைகளை பெற்றெடுத்ததாக மருத்துவர் மயூரமான தேவோலகே தெரிவித்துள்ளார்.

அனைத்து தாய்மாரும் ஆரோக்கியமான பிள்ளைகளை பெற்றெடுத்தனர் எனவும், இரண்டு குழந்தைகளுக்கு மாத்திரமே கொரோனா வைரஸ் தொற்றி இருந்தது எனவும் அவர் கூறியுள்ளார். இந்த கர்ப்பிணி தாய்மாரில் ஒருவருக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது.

கொழும்பு கிழக்கு வைத்தியசாலையில் இருந்து மாற்றப்பட்ட கொரோனா தொற்றாளர்களான இந்த தாய்மார் பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்கிய போதிலும் பிள்ளைகள் பிறந்த பின்னர் பலர் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் எனவும் மருத்துவர் தேவோலகே குறிப்பிட்டுள்ளார்.