யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் 4 பேர் படுகாயம், ஒருவர் ஆபத்தான நிலையில்!!

1521

யாழில்..

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் படுகாயம் அடைந்த நான்கு பேர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.சாவகச்சோி நுணாவில் பகுதியில் இன்று (03.01.2021) மாலை மாலை 5.20 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மன்னாரிலிருந்து – யாழ்ப்பாணம் வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ஹயஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் ஹயஸ் வாகனத்திலிருந்த 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதேவேளை ஹயஸ் வாகனம் மிக ஆபத்தான முறையில் முந்தி செல்ல முயன்றமையே விபத்துக்கு காரணம் என கூறப்படுகின்றது.

காயமடைந்த 4 போில் ஒருவரின் நிலை ஆபத்தாக உள்ளதென வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.