யாழில்..
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் படுகாயம் அடைந்த நான்கு பேர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்.சாவகச்சோி நுணாவில் பகுதியில் இன்று (03.01.2021) மாலை மாலை 5.20 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மன்னாரிலிருந்து – யாழ்ப்பாணம் வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ஹயஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் ஹயஸ் வாகனத்திலிருந்த 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதேவேளை ஹயஸ் வாகனம் மிக ஆபத்தான முறையில் முந்தி செல்ல முயன்றமையே விபத்துக்கு காரணம் என கூறப்படுகின்றது.
காயமடைந்த 4 போில் ஒருவரின் நிலை ஆபத்தாக உள்ளதென வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.