வவுனியாவில் கர்ப்பிணிப் பெண் உட்பட இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

3534


கொரோனா தொற்று..



வவுனியா, பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா, பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் வழமையான சிகிச்சைக்காக கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா வைத்தியசாலைக்கு சென்ற நிலையில்,



அவருடைய குருதியைப் பெற்று அன்டிஜன் மருந்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் இன்று அதிகாலை (04.01) வெளியாகிய நிலையில் குறித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.




இதனையடுத்து குறித்த பெண்ணுடன் தொடர்புடையவர்களை தனிமைப் படுத்தும் செயற்பாட்டை சுகாதார பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.


இதேவேளை, கிளிநொச்சி பொறியல் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் வவுனியா பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவருக்கு நேற்று (03.01) மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.