பிரபல சீரியல் நடிகைக்கு நேர்ந்த பரிதாபம்!!

5453

சீரியல் நடிகை..

தமிழகத்தில் திருமணம் செய்து கொள்வதாக கூறி, இளம் பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று ஒன்றாக இருந்த நபர் வீடியோவை வைத்து மி.ர.ட்.டி 10 லட்சம் ரூபாய் கேட்ட சம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் ராதிகா (24). சினிமா நடிகையான இவர் தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட 11 திரைப்படங்களில் துணை நடிகையாகவும், தொலைக்காட்சி தொடர்களில் முதன்மை நடிகையாகவும் நடித்துள்ளார்.

தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வரும் இவர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 28-ஆம் திகதி சென்னையில் இருக்கும் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஒன்றாக இருந்து வீடியோ எடுத்து காதலன் ராஜேஷ் என்பவர் மி.ர.ட்.டி வருவதாக கூறி பு.கா.ர் அளித்திருந்தார்.

ஆனால், அந்த பு.கா.ரி.ன் பேரின் பொலிசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ராதிகா, நீதிமன்றத்தில் பொலிசார் வழக்கு பதிவு செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, சென்னை, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய பொலிசார் நடிகை அளித்த புகாரின்படி, வி சாரணை நடத்தினர்.

அதில் நடிகை அளித்த பு.கா.ர் அனைத்தும் உண்மை என தெரியவந்தது. அதைதொடர்ந்து ராஜேஷ் மீது திருமங்கலம் அனைத்து மகளிர் பொலிசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதை அறிந்த ராஜேஷ் உடனடியாக த.லை.ம.றை.வா.கி.வி.ட பொலிசார் அவரை தே.டி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில்,

ராதிகா கடந்த 8 ஆண்டுகளாக சின்னத்திரையில் நடித்து வருகிறார். ராதிகாவின் தோழியின் மூலம் சென்னை கீழ்க்கட்டளையை சேர்ந்த ராஜேஷ் என்பவர் அறிமுகமானார்.

சின்னத்திரை நடிகை என்பதால் ராஜேஷ் அவர் சூட்டிங் எடுக்கும் பகுதிக்கு சென்று தொடர்ந்து பேசி வந்துள்ளார். இந்த நட்பு பிறகு காதலாக மாறியது.

ராதிகா சின்னத்திரையில் பிரபலமானவர் என்பதால் அவரை திருமணம் செய்து கொள்ள ராஜேஷ் வலியுறுத்தியுள்ளார். அதற்கு முதலில் ராதிகா மறுத்துள்ளார். பின்னர் ராஜேஷ் நடிகையின் பெற்றோரிடம் பேசி திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளார்.

இதையடுத்து இரு வீட்டார் முன்னிலையில் கடந்த 2019 டிசம்பர் மாதம் 1-ஆம் திகதி வெகு விமர்சையாக இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

பிறகு இவர்களின் திருமணம் கடந்த 2020 பிப்ரவரி 26-ஆம் திகதி வடபழனி முருகன் கோவிலில் நடத்த முடிவு செய்து அதற்காக திருமண அழைப்பிதழும் அடித்துள்ளனர்.

ராஜேஷ் தான் வருங்கால கணவர் என்பதால் அவருடன் ராதிகா அடிக்கடி வெளியே சென்று வந்துள்ளார். அப்போது ராஜேஷ் ஈவன்ட் மேனேஜிமென்ட் என்ற பெயரில் நட்சத்திர விடுதி ஒன்றில் நிகழ்ச்சி நடத்துவதாகவும், அந்த நிகழ்ச்சியை ராதிகா தான் தொடங்கி வைக்க வேண்டும் என்று கூறி அழைத்துள்ளார்.

வருங்கால கணவர் என்பதால் ஆடம்பரமான உடையை அணிந்து கொண்டு நடிகை ராதிகா நட்சத்திர ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு சென்றதும் ராஜேஷ் நிகழ்ச்சி திடீரென ரத்து ஆகிவிட்டது என்று கூறி ஒரு அறைக்கு ராதிகாவை அழைத்து சென்றுள்ளார்.

அதன் பின்,வந்ததும் வந்தாய் நாம் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறோமே இருவரும் ஒன்றாக இருக்கலாம் இங்கு யாரும் வரமாட்டார்கள் என்று ராஜேஷ் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

கணவராக வரப்போகும் நபர் தானே என்று, நடிகை ராதிகாவும் சம்மதம் தெரிவித்துள்ளார். அப்போது ராஜேஷ் நடிகை ராதிகாவுடன் ஒன்றாக இருந்துள்ளார்.

இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோவை நடிகை ராதிகாவுக்கு தெரியாமல் ஹோட்டல் அறையில் கேமரா வைத்து வீடியோவாக ராஜேஷ் எடுத்து வைத்துக்கொண்டார்.

பின்னர் நடிகையை வீட்டில் விட்டுவிட்டு ராஜேஷ் தனது வீட்டிற்கு சென்றுவிட்டார். பிறகு நடிகை தனது வருங்கால கணவர் என்ற முறையில் ராஜேசுக்கு போன் செய்து பேச முயற்சி செய்துள்ளார்.

ஆனால் நடிகையின் செல்போன் அழைப்பை ராஜேஷ் எடுக்க வில்லை. அத்துடன் நடிகையிடம் பேசுவதையும் அவர் தவிர்த்து வந்துள்ளார்.

ஒரு நாள் நேரில் சென்று ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய் என்று நடிகை கேட்டுள்ளார். அதற்கு அவர், உன்னுடன் ஒன்றாக இருக்கத்தான். என்னுடைய வேலை முடிந்து விட்டது. இனி உன்னிடம் எனக்கு வேலை இல்லை என்று கூறியுள்ளார்.

அதை கேட்டு அ திர்ச்சியடைந்த நடிகை, ராஜேஷிடம் த கராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ராஜேஷ் நாம் இருவரும் ஒன்றாக இருந்த வீடியோவை காட்டி என்னை தொ ந்தரவு செய்தால், ஆ.பா.ச இணையதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மி.ர.ட்.டி.யு.ள்.ளா.ர்.

அதுமட்டுமின்றி அந்த வீடியோவை கொடுக்க வேண்டும் என்றால், 10 லட்சம் ரூபாய் பணம் கொடு என்று மி.ர.ட்.டி.யு.ள்.ளா.ர். பணம் கொடுக்க மறுத்தால், உன் சினிமா வாழ்க்கையை நான் அழித்துவிடுவேன் என்றும் மி.ர.ட்.ட.ல் விடுத்துள்ளார்.

அதன்படி நடிகை ராதிகா தனது வீட்டிற்கு தெரியாமல் 2.50 லட்சத்தை ராஜேஷிடம் கொடுத்துள்ளார். மீதி பணத்தை தந்துவிடுகிறேன். எனக்கு அந்த வீடியோவை தந்துவிடு என்று கேட்டுள்ளார்.

முழு பணம் தந்தால்தான் நான் வீடியோ தருவேன் என்று ராஜேஷ் மி.ர.ட்.டி.யு.ள்.ளா.ர். உடனே நடிகை இதுகுறித்து பொலிசில் புகார் அளிப்பேன் என்று கூறியுள்ளார்.

அதற்கு ராஜேஷ் இதுபோன்ற தவறு ஏதேனும் செய்தால் உன் மீது ஆ.சி.ட் அ.டி.த்.து வாழ்க்கையை சீ ரழித்துவி டுவேன் என்றும், லாரியை வைத்து ஏற்றி கொ.லை செ.ய்.து விடுவேன் என்றும் மி.ர.ட்.டி.யு.ள்.ள.து.ம் வி.சாரணையில் தெரியவந்துள்ளது.