14 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய முச்சக்கர வண்டி சாரதி!!

364

Abuse14 வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் முச்சக்கர வண்டி சாரதியை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 2 ம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து நேற்று புதன்கிழமை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

புத்தளம் தில்லையடி பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவியே இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். வழமையாக பாடசாலைக்கு செல்வதற்காக குறித்த மாணவி சந்தேக நபரின் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார்.

சந்தேக நபர் மாணவியை பாடசாலைக்கு அழைத்துச் செல்லாது நுரைச்சோலை பிரதேசத்தில் உள்ள அவரது உறவினர் ஒருவரின வீட்டுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து பாடசாலை மாணவியின் சகோதரி ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.