WhatsApp பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!!

3389

WhatsApp..

WhatsApp செயலியை எதிர்வரும் காலங்களில் பயன்படுத்தவது ஆபத்தாகும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குனர் நாயகம் ஓஷத சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதில் ரகசியத்தன்மை முழுமையாக இல்லாமல் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். WhatsApp செயலியில் தனியுரிமை முழுமையாக வெளிப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

எனினும் இது தொடர்பில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தீவிர கவனம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.