நண்பரின் விருந்திற்கு சென்ற நபர் திடீர் மரணம்!!

1748

திடீர் மரணம்..

நண்பர்களின் வீட்டில் இடம்பெற்ற விருந்திற்கு சென்ற நபர் அன்றைய தினம் இரவு உறக்கத்திலேயே உயிரிழந்துள்ளார் என மித்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

39 வயதுடைய ரத்மல்வல கென்தகெட்டிய பிரதேசத்தை சேர்ந்த சீ.சஞ்ஜீவ லக்ஷான் என்பவரே உயிரிழந்துள்ளார். அவர் கடந்த 10ஆம் திகதி ரத்மல்வல பிரதேசத்தில் உள்ள நண்பரின் அழைப்பின் பேரில் விருந்தில் கலந்து கொண்டுள்ளார்.

அன்றைய தினம் நண்பரின் வீட்டிலேயே அவர் உயிரிழந்துள்ளார். உறக்கத்துக்கு சென்ற அவர் எழும்பாத நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அவர் உயிரிழந்துள்ளதனை உறுதி செய்துள்ளனர். எனினும் மரணத்திற்கான காரணம் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.