முகப்புத்தகம் போன்ற சமூக ஊடகங்களில் கொடுக்கப்படும் பிரச்சினைகள் : ஒன்லைன் மூலம் புகாரளிக்க வசதி!!

686

சமூக ஊடகங்களில்..

முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பிரச்சினைகளை கொடுப்பவர்கள் தொடர்பில் புகாரளிப்பதற்கான வசதி இலங்கை மக்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடுகளை ஒன்லைன் மூலமாக மேற்கொள்ள முடியும். தனி நபர் அவமதிப்பு, அவதூறு, போலி கணக்குகள் என்பவற்றால் தேவையற்ற பிரச்சினைகளை கொடுப்பவர்கள் மீதான புகார்களை பதிவு செய்ய முடியும்.

பொலிஸ்மா அதிபருக்கு சொல்லுங்கள் என்ற கருப்பொருளின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

விண்ணப்பப்படிவம் – https://www.telligp.police.lk/