மன்னாரில் முதலாவது கொரோனா மரணம் பதிவு!!

1461

கொரோனா மரணம்..

மன்னாரில் முதலாவது கொரோனா மரணம் இன்றைய தினம் (19.01.2021) பதிவாகியுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் ‘சைட்சிட்டி’ பகுதியை சேர்ந்த 61 வயதுடைய நபர் ஒருவரே கொரோனா தொற்றிற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் கடந்த 30 ஆம் திகதி சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 16 ஆம் திகதி குறித்த நபருக்கு வைத்தியசாலையில் வைத்து பீ.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த முதலாவது நபர் இவராவார்.மேலும் வடமாகாணத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த இரண்டாவது நபராவார்.