இலங்கையில் 18 நாட்களில் 66 பேர் கொரோனாவிற்கு பலி!!

611

கொரோனா..

இந்த ஆண்டு நிறைவடைந்த கடந்த 18 நாட்களில் மாத்திரம் நாட்டில் 10,437 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் 10,400 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர். கடந்த 18 நாட்களில் பதிவான கொரோனா மரணங்களில் எண்ணிக்கை 66 ஆகும்.

இதனிடையே, இலங்கைக்கு சுற்றலாப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி தங்கியிருக்கும் காலி தடல்ல பிரதேச ஹோட்டலில் மேலும் இரண்டு பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்கள் கேகாலை, ஹெட்டிமுல்லை மற்றும் காலி, மஹமோதர பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர். இதற்கு முன்னர் குறித்த ஹோட்டலின் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாட்டில் நேற்று 660 பேர் கொரோனா தொற்றாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர். இதனையடுத்து நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 54,410 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை , மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 7546 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனாவினால் மேலும் 3 பேர் மரணமானதாக நேற்று இரவு அறிவிக்கப்பட்ட நிலையிலேயே கொரோனா மரண எண்ணிக்கை 273 ஆக உயர்ந்துள்ளது.