கடந்த 19 நாட்களில் 10,958 பேருக்கு கொரோனா தொற்று : 74 பேர் மரணம்!!

691

கொரோனா..

இலங்கையில் கடந்த 19 நாட்களில் மாத்திரம் 10 ஆயிரத்து 958 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 806 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 2 ஆயிரத்து 120 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 809 பேருக்கும் வைரஸ் பரவியுள்ளது.

19 நாட்களில் 74 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, கடந்த நவம்பரில் 17 ஆயிரத்து 472 பேருக்கும், டிசம்பரில் 18 ஆயிரத்து 838 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.