இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று!!

599

கொரோனா..

இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீரர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள சர்வதேச ஒருநாள் மற்றும் டுவன்ரி20 போட்டித் தொடர்களில் பங்கேற்பதற்காக பயிற்சி பெற்று வந்த இரண்டு வீரர்களே கொவிட் தொற்றினால் பா திக்கப்பட்டுள்ளனர்.

இந்த கிரிக்கெட் வீரர்கள் மூன்று குழுக்களாக பிரிந்து பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது. கொவிட் தொற்றுக்கு இலக்கான இரண்டு வீரர்களும் கொவிட் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

இந்த கிரிக்கெட் வீரர்களுக்கு எவ்வாறு கொவிட் தொற்று ஏற்பட்டது என்பது குறித்து வி சாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர். பயிற்சியில் ஈடுபட்ட அனைத்து வீராகளும் இந்த தொற்று உறுதியான வீரர்களுடன் தொடர்பு பேணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.