மற்றுமொரு கொரோனா தொற்றாளர் தப்பியோட்டம் : பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கை!!

651

தொற்றாளர் தப்பியோட்டம்..

சிகிச்சை நிலையத்திற்கு அழைத்து செல்ல தயாராக இருந்த கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். கட்டுநாயக்க, வலானகொட பிரதேசத்தில் அமைந்துள்ள தங்குமிடத்தில் இருந்து குறித்த கொரோனா தொற்றாளர் தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த நோயாளி நேற்று தப்பிச் சென்றுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க பிரதேசத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய 25 வயதுடைய தப்பியோயுள்ளார்.

PCR பரிசோதனையின் போது குறித்த இளைஞன் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பதவிய, போகஹபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவராகும். தப்பி சென்றவரை கண்டுபிடிப்பதற்காக கட்டுநாயக்க பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.