சட்டவிரோதமாக சவுதி செல்ல முயற்சித்த 13 பெண்கள் கைது!!

366

Sauthiசட்டவிரோதமாக சவுதி அரேபியாவுக்கு செல்ல முயற்சித்த 13 பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் வேலைவாய்ப்புக்காக இவ்வாறு சட்டவிரோதமாக சவுதிக்கு புறப்பட்டுச் செல்லவிருந்தாக விமான நிலையத்தில் இயங்கும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுற்றுலா வீசாவில் டுபாய் நோக்கி செல்வதாக காட்டி இந்த பெண்கள் சவுதிக்கு செல்ல முயற்சித்துள்ளனர்.

வெளிநாட்டுக்கு தொழில் வாய்ப்பை பெறுவதற்கு தேவையான பயிற்சிகளை பெற்ற சான்றிதழ்கள், மருத்துவ அறிக்கை உட்பட தேவையான அறிக்கைகள் எதுவும் இந்த பெண்களிடம் இருக்கவில்லை என அதிகாரிகள் கூறினர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் கொழும்பு, கம்பஹா, கிரிந்திவல, கிளிநொச்சி , வெலிகந்த ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் இவர்களிடம் தலா இரண்டு கடவுசீட்டுகள் இருந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.