வௌ்ளவத்தையில் விபச்சார விடுதி முற்றுகை : இரண்டு பெண்கள் கைது!!

502

Proவெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் டபிள்யு.ஏ. சில்வா மாவத்தை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் இந்த விபச்சார விடுதி இயங்கி வந்துள்ளதாக வௌ்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

புதுக்கடை இலக்கம் 3 நீதவான் வழங்கிய அனுமதியை அடுத்து வௌ்ளவத்தை பொலிஸார் நேற்று இரவு 08 மணியளவில் குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது பாலியல் தொழிலுக்குத் தயார் நிலையில் இருந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹங்வெல்ல மற்றும் வத்தளை பகுதிகளைச் சேர்ந்த 28, 38 வயதுடைய பெண்களே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

வௌ்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.