வாளிக்குள் தலைக்குப்புற தவறி விழுந்த 2 வயதுக் குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம் : கதறும் பெற்றோர்!!

695

தமிழகத்தில்..

தென்காசி சங்கரன்கோவிலில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது ஆண் கு ழந்தை, தண்ணீர் நிரம்பிய பிளாஸ்டிக் வாளியில் தவறி தலைக்குப்புற விழுந்து இ.றந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கக்கன் நகரை சேர்ந்த ஜெபஸ்டியான்-எஸ்தர் தம்பதியினரின் மகனான ஆரோன் என்ற அந்தக் கு ழந்தை, வீட்டின் பின்பக்கமுள்ள படிக்கட்டில் அமர்ந்தவாறு விளையாடிக்கொண்டு இருந்திருக்கிறான்.

படிக்கட்டின் அருகே தண்ணீருடன் இருந்த பிளாஸ்டிக் வாளியில் இருந்து சிறிய பொம்மை கோப்பையில் தண்ணீரை இரைத்து விளையாடிக் கொண்டிருந்த கு ழந்தை தவறி அந்த வாளிக்குள் தலைக்குப்புற விழுந்ததாகக் கூறப்படுகிறது.