கொரோனா மரணங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்!!

681

கொரோனா மரணங்கள்..

கொரோனா வைரஸ் தொற்று பரவலின் இரண்டாவது அலை ஆரம்பித்த பின்னர் இலங்கையில் ஏற்பட்ட 60 வயதுக்கும் மேற்பட்டவர்களின் மரண எண்ணிக்கை 200 நெருங்கி வருகிறதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை இலங்கையில் 290 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 277 பேர் இரண்டாவது அலையின் ஆரம்பத்துடன் இறந்துள்ளதாக கொவிட் – 19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் இரண்டாவது அலையில் மரணடைந்த 193 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என தெரியவருகிறது. எவ்வாறாயினும் நடுத்தர வயதான 72 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

31 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட 6 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளதுடன் 10 முதல் 30 வயதுக்கு உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். 10 வயதுக்கும் குறைந்த ஒரு கொரோனா மரணம் சம்பவித்துள்ளதாகவும் அந்த மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.