இராணுவத்துக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் 44 தமிழ் யுவதிகள் இணைப்பு!!

268

Army

இலங்கை இராணுவத்தின் மகளிர் படையணிக்கு வட மாகாணத்தைச் சேர்ந்த மேலும் 44 தமிழ் யுவதிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இணைக்கப்பட்ட யுவதிகளில் 20பேர் முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் ஏனைய 24பேரும் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.