கொரோனா தடுப்பூசியால் ஏற்படக்கூடடிய பக்க விளைவுகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!!

2089

கொரோனா தடுப்பூசி..

இலங்கையில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ள நிலையில் கொவிஷீல்ட் தடுப்பூசியால் நேரக்கூடிய பக்க விளைவுகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் நோயாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கென பல வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களில் கொவிஷீல்ட் தடுப்பூசியால் நேரக்கூடிய பக்க விளைவுகளும் இடம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி பொதுவான பக்க விளைவுகளாக வலி, தொடும் போது வலி, சிவத்தல், தோலில் அரிப்பு ஆகியவை அடங்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் ஊசி போடப்பட்ட இடத்தில் வீக்கம், கண்டல் காயம் ஆகியவையும் எதிர்பார்க்கப்படுகிறதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை களைப்பு, குமட்டல், காய்ச்சல் போன்ற உணர்வுகளும் பொதுவான பக்கவிளைவுகளில் அடங்கும் என்பதுடன், லேசான காய்ச்சல், மூட்டு வலி மற்றும் தசை வலி ஆகியனவும் பொதுவான பக்கவிளைவுகளாக காணப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், தலை சுற்றல், பசியின்மை, வயிற்று வலி மற்றும் தோலின் மீது செந்நிறப் பொட்டுக்கள் போன்றவை அசாதாரணமான பக்க விளைவுகளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-