உருமாறிய மூன்று வகை கொரோனா : அதிக மரண ஆபத்தை ஏற்படுத்துமாம்!!

803

கொரோனா..

14 நாடுகளில் பரவியுள்ள 3 புதிய வகை கொரோனா வைரஸால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று ஐ.நா சபை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா சபையின் அங்கமான பாஹோ என்று அழைக்கப்படுகின்ற அமெரிக்க சுகாதார அமைப்பு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தற்போது உருமாறிய 3 வகை கொரோனா வைரஸ் 14 நாடுகளில் பரவியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதில் இங்கிலாந்து நாட்டிலும் தென்னாபிரிக்காவிலும் கண்டறியப்பட்டவை இரு வகை கொரோனா வைரஸ் என்றும், மூன்றாவது வகை வைரஸ் பிரேஸில் நாட்டின் அமேசனோஸ் மாகாணத்தில் கண்டறியப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்படுகின்றது.

சீனாவில் இருந்து வந்த கொரோனா வைரஸை விட உருமாறிய கொரோனா அதிக மரண ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.