இரு குழுக்களிடையில் மோதல் 9 பேர் படுகாயமடைந்து யாழ்.போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் சுழிபுரம் மேற்கு ஐயனார் கோவிலில் மதுபோதையில் நின்றவர்களிடையே இவ் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே இவ்மோதலில் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிய வருகின்றது.
சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.