கொரோனாவால் இலங்கையில் உயிரிழந்த முதல் வைத்தியரின் உடல் தகனம் செய்யப்பட்டது!!

698


கொரோனா..



கொரோனா நோய்த் தொற்று காரணமாக இலங்கையில் உயிரிழந்த முதலாவது முன்னரங்க மருத்துவ பணியாளரான வைத்தியர் கயான் தந்தநாரயணவின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.



காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்தியர் கயான் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.




உயிரிழந்த வைத்தியர் கயானின் சடலம் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய இன்றைய தினம் காலி தடெல்ல மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.


இதேவேளை, கொரோனாவால் உயிரிழந்த வைத்தியர் கயானின் மனைவி மற்றும் தாயாருக்கும் கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.