தொடர்ந்து 4 மணிநேரம் மொபைலில் கேம் விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

1749


புதுச்சேரியில்..



புதுச்சேரியில் 16 வயது சிறுவன் தொடர்ந்து 4 மணிநேரமாக மொபைலில் கேம் விளையாடிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இந்தியாவில் புதுச்சேரி பகுதியில் உள்ள வில்லியனுர் கிராமத்தில் தர்ஷன் எனும் 16 வயதான சிறுவன் நேற்றிரவு தொடர்ந்து 4 மணி நேரமாக ஒன்லைனில் ‘Fire Wall’ என்ற கேமை விளையாடிக்கொண்டிருந்தார்.




சிறுவனின் தந்தை பச்சையப்பன் எதேச்சையாக தன் மகனை பார்த்தபோது, அவன் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளான். பதறிப்போன பெற்றோர்கள் இரவு 11.40 மணியளவில் Jipmer மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.


ஆனால், பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். அதனைக் கேட்ட பெற்றோர் கதறி அழுதுள்ளனர்.

தர்ஷன், தொடர்ந்து கேம் விளையாடியதால் தான் இறந்துவிட்டானா அல்லது வேறு ஏதும் நோய் காரணமாக இறந்தானா என்பது இப்போதைக்கு தெரியவில்லை.


அவனது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வில்லியனூர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகினறனர்.

இந்நிலையில், நான்கு மணி நேரம் தொடர்ந்து மொபைலில் கேம் விளையாடியா நிலையில் சிறுவன் உயிரிழந்த சோக சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.