இலங்கையில் 18 மாத ஆண் சிசு உட்பட மேலும் 7 கொரோனா மரணங்கள் பதிவு!!

757

கொரோனா மரணங்கள்..

நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்வர்களின் எண்ணிக்கை 330 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி இன்றைய தினம் மேலும் ஏழு கொரோனா மரணங்கள் பற்றிய விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

1. வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதான பெண் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி கராபிட்டிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா மற்றும் மூளையில் ரத்தம் கசிதல் ஆகிய காரணிகளினால் இவர் உயிரிழந்துள்ளார்.

2. கொழும்பு – 15 பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதான பெண் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா மற்றும் இரத்த அழுத்தம் ஆகிய காரணிகளினால் இவர் உயிரிழந்துள்ளார்.

3. வத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதான பெண் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி தெல்தெனிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா மற்றும் இரத்த அழுத்தம் ஆகிய காரணிகளினால் இவர் உயிரிழந்துள்ளார்.

4. நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதான பெண் ஒருவர் பிம்புர வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா, நீரிழிவு, இரத்தம் குறைதல் ஆகிய காரணிகளால் இவர் உயிரிழந்துள்ளார்.

5. கெலிஓயா பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயதான ஆண் ஒருவர் நேற்றைய தினம் கண்டி தெல்தெனிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா, இரத்தம் விசாமாகியமை, தீவிர நீரிழிவு, சிறுநீரக நோய் என்பனவற்றில் இவர் உயிரிழந்துள்ளார்.

6. கொழும்பு – 2 பிரதேசத்தைச் சேர்ந்த 18 மாத ஆண் சிசுவொன்று நேற்றைய தினம் லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியாவினால் இவர் உயிரிழந்துள்ளார்.

7. ராகம பிரதேச்தைச் சேர்ந்த 32 வயதான ஆண் ஒருவர் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா, இரத்த அழுத்தம் மற்றும் அஸ்துமா ஆகிய நோய்க் காரணிகளினால் இவர் உயிரிழந்துள்ளார்.

சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய இந்த விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.