கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 26 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!!

829

கொரோனா..

கொரோனா தொற்றுக்குள்ளான பலர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருவதாக விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். அதற்கமைய தற்போது வரையில் 26 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பு தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து அவர்களுக்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கு அச்சமின்றி பொது மக்களை முன்வருமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.