குழந்தை பெற்று 3 மாதங்களுக்கு பின்னர் குழந்தையை சந்தித்த தாய் : உருக்கமான சம்பவம்!!

1353

அமெரிக்காவில்..

அமெரிக்காவில் தாய் ஒருவர் கொரோனாவால் சிக்கியதால், 3 மாதங்களுக்கு பின் தன் குழந்தையை கொஞ்சி மகிழும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் விஸ்கான்சின் மாகாணத்தில், மேடிசன் நகரில் கெல்சி என்ற பெண் நான்காவது முறையாக கர்ப்பம் தரித்து குழந்தையை பெற்றெடுக்க இருந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம், அவரை கொரோனா தா.க்.கி.ய.து.

இதையடுத்து அவர், அங்குள்ள செயின்ட் மேரி மருத்துவமனையில் கடந்த நவம்பர் மாதம் சேர்க்கப்பட்டார். அவரை மருத்துவ ரீதியில் கோமாவில் ஆழ்த்திய மருத்துவர்கள் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து, பெண் குழந்தையை பிரசவிக்க செய்தனர்.

கெல்சியின் ஆக்சிஜன் அளவு மிக குறைவாக இருந்ததால் மருத்துவர்கள் இதைச் செய்தனர்.டிசம்பர் மாத இறுதியில் கெல்சிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது வரும் என மருத்துவர்கள் கருதினர்.

ஆனால் அவரது உடல்நிலை திடீரென நன்றாக தேறத்தொடங்கியது. ஜனவரி மாதம் மத்தியில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே அவரது குழந்தை லூசி என பெயரிடப்பட்டு தந்தை டெரக் டவுன்சென்ட் பராமரிப்பில் வளரத்தொடங்கினாள்.

ஏற்கனவே 3 குழந்தைகள் இருந்த நிலையில் இந்த நான்காவது குழந்தையையும் இக்கட்டான தருணத்தில் அவர் கவனமாக வளர்த்து வந்தார்.

ஏறத்தாழ 3 மாதங்களுக்கு பின்னர் இப்போது குணம் அடைந்து, கெல்சி வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பியவுடன் செல்லமகள் லூசியை கொஞ்சி மகிழ்ந்தார்.