மனைவியை காப்பாற்ற முயன்ற கணவர் : மலை உச்சியில் 5 வயது மகள் கண்முன்னே பறிபோன பெற்றோர் உயிர் : நடந்தது என்ன?

2790

இத்தாலி..

இத்தாலி ஆல்ப்ஸ் மலையில் 5 வயது மகள் கண்முன்னே பெற்றோர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிலனைச் சேர்ந்த 35 வயதான VC மற்றும் அவரது 40 வயது கணவர் FM ஆகியோர் மலைகளை மிகவும் நேசிக்கும் ஜோடியாக திகழ்ந்தனர்.

ஆனால் அவர்கள் இத்தாலிய ஆல்ப்ஸுக்கு சென்றதே VC- FM ஜோடியின் கடைசி பயணமானது. கடந்த ஞாயிற்றுக்கிழமை Brescia-வுக்கு அருகிலுள்ள Passo della Presolana-வில் தங்கள் மகள் மார்டினா (5) மற்றும் இரண்டு நண்பர்களுடன் VC-FM ஜோடி நடைபயணம் சென்றனர்.

அவர்கள் ஒரு ஐஸ் சேனலைக் கடக்க முயன்ற போது VC நழுவி விழுந்துள்ளார், அவருக்கு உதவ முயன்ற கணவர் FM-மும் விழுந்துள்ளார். இருவரும் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

கண்முன்னே பெற்றோர்கள் இறப்பதை பார்க்க வேண்டிய கொடூர நிலைக்கு மார்ட்டினா தள்ளப்பட்டுள்ளார். ஆனாதையான மார்டினா இப்போது தனது தாத்தா பாட்டிகளுடன் வசிக்கிறார்.

சிறுமியின் தலைவிதியைப் பற்றி மிகவும் கவலையடைந்த இத்தாலியர்கள் பலர் குழந்தைக்காக பணத்தை நன்கொடை செய்கிறார்கள். சுமார் 2,20,000 யூரோக்கள் மார்டினாவுக்காக சேகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.