பண்டாரநாயக்க கல்லூரியின் 47 மாணவர்கள் தலைமறைவு!!

702

studentகம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் 47 மாணவர்கள் தலைமறைவாகியுள்ளனர். கல்லூரியின் அதிபரை விலக்குமாறு கோரி பாரியளவில் போராட்டம் நடத்தி கலகம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மாணவர்களே இவ்வாறு தலைமறைவாகியுள்ளனர்.

இந்த மாணவர்களை கைது செய்ய பொலிஸார் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த மாணவர்கள் வீடுகளை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளனர்.

மாணவர்களை கைது செய்ய தேடுதல் வேட்டைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பவத்துடன் தெடர்புடைய மாணவர்களை கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தப் போவதாக பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று மாணவர்கள் இதுவரையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கலகம் இடம்பெற்ற போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளின் ஒத்துழைப்புடன் மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.