வீதி விபத்தில் ஒருவர் பரிதாபமாக பலி!!

1381


விபத்து..



திருகோணமலை – கந்தளாய் தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதியால் சென்றுகொண்டிருந்த நபரொருவருடன் லொறியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.



இச்சம்பவம் இன்று இடம் பெற்றுள்ளது. அதே பகுதியை சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் தற்போது கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.




இந்நிலையில், சாரதியை கைது செய்துள்ளதாகவும், விபத்து தொடர்பான விசாரணைகளை கந்தளாய் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.