வவுனியா புளியங்குளம் பகுதியில் யாழ்தேவி புகையிரதம் மோதி தந்தையும் பிள்ளையும் பலி!!

646

Trainகிளிநொச்சி பளையில் இருந்து கொழும்பை நோக்கி பயணித்த யாழ்தேவி புகையிரதத்தில் மோதுண்டு தந்தை(35) ஒருவரும் மூன்று வயது குழந்தையும் பலியாகினர். இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

புளியங்குளம் 160வது மைல்கல் பிரதேசத்தில் பாதுகாப்பாற்ற புகையிரத கடவையை மோட்டார் சைக்கிள் மூலம் கடக்கும் போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.