வவுனியாவில் தீயில் எரிந்த பெண் சிகிச்சை பலனின்றி மரணம்!!

2503


தெற்கிலுப்பைக்குளம் பகுதியில்..



வவுனியா தெற்கிலுப்பைக்குளம் பகுதியில் தீயில் எரிந்து படுகாயமடைந்த பெண் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (06.02.2021) மரணமடைந்துள்ளார்.



குறித்த பெண் கடந்தவாரம் தனது வீட்டில் இருந்த சமயம் தீயில் எரிவதை அவதானித்த அயலவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.




சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த அமல உட்பவும் (வயது 37) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.


இந்நிலையில் நேற்று (06.02) அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். அவரது மரணம் தொடர்பாக வவுனியா நகர திடீர் மரண விசாரணை அதிகாரியான சிவநாதன் கிசோரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.