இரத்த சிவப்பு வெள்ளத்தில் மூழ்கிய கிராமம் : காரணம் என்ன?

1900

இந்தோனிஷியாவில்..

இந்தோனிஷியாவில் கிராமம் ஒன்று இரத்த சிவப்பு நிற வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் புடைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி திகிலடைய வைத்துள்து.

Pekalongan நகரில் உள்ள Jenggot கிராமத்திலே இந்த அதிசயம் நடந்துள்ளது. சனிக்கிழமையன்று அருகிலுள்ள சாயத்தொழிற்சாலையில் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து Jenggot கிராமம் இரத்த-சிவப்பு நிற வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

பலர் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்த நிலையில், சமூக ஊடகங்களில் அது பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படங்கள் உண்மை என Pekalongan பேரழிவு நிவாரணத் தலைவர் Dimas Arga Yudha உறுதிப்படுத்தினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாடிக் சாயமே சிவப்பு வெள்ளத்திற்கு காரணம். சிறிது நேரம் கழித்து மழையுடன் கலக்கும்போது அது மறைந்துவிடும் என Dimas Arga Yudha கூறினார்.

இந்த புகைப்படம் வதந்தி பரப்பும் மோசமான நபர்கள் கைகளில் கிடைத்தால், அவர்கள் என்ன கதைகளை தயாரிப்பார்கள் என்பது குறித்து நான் மிகவும் பயப்படுகிறேன் என பெண் சமூக ஊடக பயனர் ஒருவர் கூறியுள்ளார்.