அதிக வேகத்தில் பயணித்த முச்சக்கரவண்டி சாரதியொருவர் விபத்தில் பலி!!

1001

விபத்து..

ஹெட்டிபொல – நிகவெரடிய பிரதான வீதியில் அதிக வேகத்தில் பயணித்த முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மின்சார கம்பத்தில் மோதியதில் அதன் சாரதி உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. பன்னல பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய மொஹமட் நசுருதீன் என்ற இளைஞனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அதிக வேகம் காரணமாகவே விபத்து இடம்பெற்றுள்ளதாக அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.