கொரோனா..
இலங்கையில் கோவிட் – 19 தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
கோவிட் – 19 தொற்றுக்கு உள்ளாகி மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன் உறுதிப்படுத்தியுள்ள நிலையிலேயே இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
அதன்படி, நாட்டில் கோவிட் – 19 தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 365 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.