வவுனியாவில் பாடசாலை மாணவி சடலமாக மீட்பு!!

6507

பாடசாலை மாணவி..

வவுனியா வெளிவட்ட வீதியில் அமைந்துள்ள வீட்டில் 16 வயதுடைய சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவி தூ.க்கில் தொ.ங்கிய நிலையில் இன்று (09.02.2021) மாலை ச.டலமாக மீ.ட்கப்பட்டுள்ளார்.

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் கா.பொ.த சாதாரண தரத்தில் கல்வி பயிலும் 16 வயதுடைய பாடசாலை மாணவி மதியம் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பியதுடன் அவரும் அவரது தங்கையும் வீட்டில் இருந்துள்ளனர்.

குறித்த சமயத்தில் குறித்த மாணவி வீட்டின் அருகேயுள்ள பகுதியில் தூ.க்கில் தொ.ங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். வீட்டினுள் இருந்த தங்கை வெளியே சென்ற சமயத்தில் சகோதரி தூ.க்கில் தொ.ங்கிய நிலையில் இருப்பதை அவதானித்து,

உடனடியாக அயலவர் வீட்டிற்கு சென்று நடந்தவற்றினை தெரிவித்துள்ளார். எனினும் அயலவர்கள் வீட்டிற்கு வந்த சமயத்தில் குறித்த மாணவி தூ.க்கில் தொ.ங்கிய நிலையில் ச.டலமாக காணப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் அயலவர்கள் மாணவியின் பெற்றோர் மற்றும் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தமையினையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மாணவியின் ம.ரணம் தொடர்பிலான வி.சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பிரேத பரிசோதனைகளுக்காக மாணவியின் ச.டலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.