வவுனியா – புளியங்குளம் பகுதியில் கூலர் ரக வாகனம் தடம்புரண்டு விபத்து!!

1371

விபத்து..

வவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை 9.30 மணியளவில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கூலர் ரக வாகனம் ஒன்று வீதியை கடக்க முற்பட்ட மாட்டுடன் மோத முற்பட்ட நிலையில் தடம்புரண்டு விபத்திற்கு இலக்காகியுள்ளது.

இன்று (11.02.2021) காலை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குளிரூட்டப்பட்ட கோழி இறைச்சிகளை ஏற்றிச் சென்ற கூலர் ரக வாகனமே புளியங்குளம் சந்திக்குச் சற்று அருகில் இவ்வாறு தடம்புரண்டுள்ளது.

இதனால் வாகனத்தில் பயணித்த எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என்று தெரியவருகிறது. இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் கைவிடப்பட்ட கட்டாக்காலி மாடுகளினால் இவ்வாறு வீதிகளில் பல்வேறு விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றது . இதனால் பல வாகனங்களும் வாகனத்தில் செல்பவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பிரதான கண்டி வீதியிலேயே அதிகளவிலான விபத்துக்கள் கால்நடைகளுடன் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.