ஏ9 வீதியில் சீமெந்து ஏற்றிச் சென்ற பாரவூர்தி தடம்புரண்டு விபத்து : ஒருவர் படுகாயம்!!

1175

விபத்து..

சீமெந்து ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று ஏ9 வீதி பனிக்கன்குளம் பகுதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்து மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை (12.02) இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, திருகோணமலையில் இருந்து யாழப்பாணம் நோக்கி சீமெந்து ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று மாங்குளம், பனிக்கன்குளம் ஏ9 வீதியில் பயணித்த போது சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

இதன்போது குறித்த பாரவூர்தியில் பயணித்த அதன் நடத்துனர் காயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.