வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட உழவர் சந்தை திறந்து வைப்பு!!

2571

மாவட்ட உழவர் சந்தை..

வவுனியா மாவட்ட விவசாயிகளின் உற்பத்திக்கு நியாயமான விலையை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் மாவட்ட உழவர் சந்தை திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இன்று(13.02.2021) காலை மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேனவினால் குறித்த சந்தை திறந்து வைக்கப்பட்டது.

விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களிற்கு நியாயமான விலை கிடைக்காமையினாலும், நுகர்வோர்களிற்கு சரியான விலையில் பொருட்கள் கிடைக்காமையினையும் கருத்தில் கொண்டு வவுனியா மாவட்டத்தில் விவசாயிகளிற்கு சேவை வழங்கும் நோக்குடன் குறித்த உழவர்சந்தை திறந்து வைக்கப்பட்டது.

விவசாயிகள் தமது கமநல கேந்திர நிலையங்களினூடாக தமது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய முடியும் என்பதுடன், வியாபாரிகளுக்கு மொத்தமாக விற்பனை செய்வதற்கான ஒழுங்குகளும் இதனூடாக விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் இ.விஜயகுமார், மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார், பிரதேச செயலாளர் நா.கமலதாசன், பிரதி விவசாயப் பணிப்பாளர் தெ.யோகேஸ்வரன்,

மாவட்ட கமக்கார அமைப்புக்களின் சம்மேளத்தினர், வர்த்தக சங்கத்தினர், தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினர், கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.