வவுனியாவில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

2143

கொரோனா தொற்று..

வவுனியாவில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா, சூசைப்பிள்ளையார் குளம் பகுதியில் வர்த்த நிலையம் ஒன்றில் பணியாற்றுபவருக்கு நேற்றைய தினம் (12.02) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவருடன் தொடர்புடைய 80 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இன்று (13.02) அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், நேற்று மாலை வெளியாகிய பீசீஆர் முடிவுகளில் வவுனியா பொலிசார் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மேலும் 4 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்புடத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் முன்னெடுத்துள்ளனர்.