இலங்கையில் கொரோனா நிலவரம் : நாட்டு மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை!!

987

கொரோனா..

சுகாதார சட்டங்களை சரியான முறையில் பின்பற்றி கோவிட் – 19 வைரஸ் பரவலை ஒழிக்க உதவுமாறு நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவிட் – 19 ஒழிப்பு மற்றும் ஆரம்ப சுகாதார ராஜாங்க அமைச்சர் மருத்துவர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

முககவசம் அணிதல் மற்றும் பயணங்கள் மேற்கொள்ளப்படுவதை வெகுவாக குறைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். கோவிட் – 19 தொற்றாளர்கள் தினமும் அடையாளம் காணப்படுவது நாட்டில் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் சுகாதார சட்டங்களை சரியான முறையில் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.