கொழும்பில் திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டார் வாகனம்!!

486

மோட்டார் வாகனம்..

கொழும்பு,மருதானை – டீன்ஸ் வீதியிலுள்ள சுகாதார அமைச்சின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனம் ஒன்று இன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீப்பரவலை கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீப்பரவல் ஏற்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் மருதானை – டீன்ஸ் வீதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.