விபத்தில் ஒருவர் உயிரிழப்பு : மற்றுமொருவர் படுகாயம்!!

909

நாவலப்பிட்டி..

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்திற்கு இலக்கானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயங்களுக்குள்ளாகி உள்ளார்.

நாவலப்பிட்டி – ஹரங்கல பகுதியிலிருந்து கொத்மலை பகுதிக்குச் சென்று கொண்டிருந்த குறித்த முச்சக்கரவண்டி நேற்று மாலை ஹரங்கல – கொத்மலை நீர்த்தேக்க பிரதான வீதியின் ரத்மிலபிட்டிய பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்திற்கு இலக்காகியுள்ளது.

முச்சக்கரவண்டி சாரதிக்கு முச்சக்கரவண்டியின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர் ஹரங்கல பகுதியைச் சேர்ந்த ஆர்.எம்.புத்திக்க (வயது 30) என தெரியவருகிறது.

உயிரிழந்தவரின் சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.